தடை நீக்கம்: அரசின் அறிவிப்புக்கு புலிகள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேகூறியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் வெளியுறவுத்துறைலட்சுமணன் கதிர்காமர் கூறியுள்ளதற்கு புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரும் தலைமைத் தூதருமான ஆண்டன் பாலசிங்கம்கூறியுள்ளதாவது:

இனப் பிரச்சனையைத் தீர்க்க அரசு உண்மையிலேயே அக்கறை காட்டுவதை இந்தப் பேச்சு காட்டுகிறது.பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க இந்தத் தடை பெரும் இடைஞ்சலாக இருந்து வருகிறது.

இந்தத் தடையை நீக்குவதன் மூலம் தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தடைநீக்கம் என்பது புலிகளுக்குத் தரப்படும் சலுகை அல்ல, இது தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றவகையில் எங்களக்குத் தரப்படும் நியாயமான அங்கீகாரம்.

ஆனால், தடையை நீக்குவதை கதிர்காமர் விரும்பவில்லை என நினைக்கிறோம். இதன் மூலம் பேச்சுவார்த்தைகளைசீர்குலைக்க அவர் விரும்புகிறார். கதிர்காமர் பதவியில் இருந்தபோது புலிகள் எதிர்ப்பு, புலிகளுக்குத் தடை என்றஒரே நோக்கத்துடன் தான் செயல்பட்டார். இதன்மூலம் தனக்கு அளிக்கப்பட்ட பதவியையும் வீணாக்கினார்.

இதனால், இனப் பிரச்சனையில் கதிர்காமருக்கு மிக முக்கியப் பங்குண்டு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைப் பொறுத்தவரை நியாயமாக நடந்து கொள்கிறார். உண்மை நிலையைப் புரிந்துவைத்திருக்கிறார். நாட்டில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த விரும்புகிறார் என்றார் ஆண்டன் பாலசிங்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+