பழனி அருகே டவுன் பஸ் மீது மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீச்சு

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி அருகே டவுன் பஸ் மீது மர்ம கும்பல் ஒன்று அதிரடியாய் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்துவிட்டு ஓடிவிட்டது.

பழனியில் இருந்து பாப்பம்பட்டிக்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை ஒரு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்ஸில் டிரைவர் பகவதிவேலு, கண்டக்டர் கண்ணன் என்பவரும் பணியில் இருந்தனர்.

பஸ்ஸில் 3 பயணிகளே இருந்தனர். பஸ் நெய்காரப்பட்டி அருகே வந்த போது அங்குள்ள ஒரு வேகத்தடையைகடக்க வேண்டி டிரைவர் பஸ்ஸின் வேகத்தைக் குறைத்துள்ளார்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று பஸ்ஸூக்குள் தாவி ஏறியது. இதைப் பார்த்ததும் டிரைவர்,கண்டக்டர் மற்றும் பயணிகள் திடுக்கிட்டனர். அந்த மர்ம கும்பல் பயணிகளை நோக்கி பெட்ரோல் குண்டுகளைவீசினர்.

சில பெட்ரோல் குண்டுகள் வீசிய வேகத்தில் பஸ்ஸின் கடைசி சீட்டுக்கு சென்று விழுந்து பயங்கர சத்தத்துடன்வெடித்தன. இதனால் அந்த இடத்தில் இருந்த சீட்டுகள் எல்லாம் குபுகுபுவென தீப்பிடித்து எரிந்தன. மர்ம கும்பல்பஸ்ஸில் இருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

உடனடியாக டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். பயணிகள், கண்டக்டர், டிரைவர் உடனடியாக பஸ்ஸில் இருந்துஇறங்கி, தீயை அணைக்க மண்ணை அள்ளிப் போட்டனர்.

பெரும் விபத்து தடுக்கப்பட்டாலும், பஸ்ஸில் உள்ள சில சீட்டுகள் தீக்கிரையாகியது. இச்சம்பவம் குறித்து பழனிபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக இந்த மர்ம கும்பல் பஸ்ஸூக்கு தீ வைத்தனர் என்பதுதெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+