காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதற்காக இளங்கோவனைத் தவிர திருவள்ளூர்மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனின் பதவி செல்லாது என்றும் அவர்அப்பதவியில் நீடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2மனுக்களைத் தாக்கல் செய்தார்.
இவற்றில் இளங்கோவன் காங்கிரஸ் தலைவராகப் பதவியில் நீடிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரும்மனுவை நீதிபதி பத்மநாபன் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தார்.
ஆனால் இளங்கோவன் வகித்து வரும் காங்கிரஸ் தலைவர் பதவி செல்லாது என்று கோரிய பார்த்தசாரதியின் மனுஇன்னும் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications