தீவிரவாதிகளைத் தேடுகிறதாம் பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்:
இந்தியா கொடுத்துள்ள 20 பேர் பட்டியலில் உள்ள 14 இந்தியர்களைத் தேடும் பணி நடந்து வருவதாக பாகிஸ்தான்கூறியுள்ளது.
ஆனால், இவர்கள் பாகிஸ்தானில் இல்லை என முதலில் கூறிய அந் நாட்டு அரசு பின்னர் அவர்களைஇந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று கூறியது. இதன் பின்னர் இந்தியாவில் பதுங்கியுள்ள பாகிஸ்தானுக்குஎதிரான தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றது.
பட்டியல் தந்தால் ஒப்படைக்கத் தயார் என்று இந்தியா உடனடியாக பதில் கூறியுடன் இன்னும் தயாராகவில்லைஎனக் கூற பாகிஸ்தான் மழுப்பியது.
ஆனால் நேற்று நிருபர்களிடம் பேசிய அந் நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில்,
இந்தியா கோரியுள்ள 20 தீவிரவாதிகளில் 14 இந்தியர்களைத் தேடும் பணி தொடங்கியுள்ளது. அவர்கள்பிடிபட்டால் எங்கள் நாட்டிலேயே வைத்து விசாரிக்கப்படுவர் என்றார்.
இந்தத் தீவிரவாதிகளை பாதுகாத்து வைத்திருப்பது பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐயும் தான். இவர்களைத் தேடிவருகிறோம் என பாகிஸ்தான் அரசு கூறுவது நகைப்புக்குரியது என இந்திய உளவுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே மும்பை தாதாக்களான தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், மும்பை குண்டுவெடிப்பில்தொடர்புடைய டைகர் மேமன் ஆகியோர் கராச்சி நகரில் அரசின் பாதுகாப்புடன் மிக வசதியாக வாழ்ந்து வருவதைமுதலில் கண்டறிந்து வெளியிட்ட பாகிஸ்தான் வார இதழின் நிருபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குலாம் ஹஸ்னைன் என்ற அந்த நிருபர் அமெரிக்காவின் டைம் இதழில் இச் செய்தியை வெளியிட்டார்.
மேலும் பாகிஸ்தான் நியூஸ்லைன் என்ற வாரஇதழின் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்அனுப்பப்பட்டு வருவது குறித்த செய்தியையும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்.
இப்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.