மதுராந்தகம் அருகே கிணற்றில் மூழ்கி ஆந்திர மாணவர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தண்ணீரில்மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமரேந்திர ரெட்டி. இவர் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிணற்றில் தன் நண்பர்களுடன் ரெட்டி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். அவருடைய நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சிசெய்தனர்.
ஆனால் அவர்களுடைய முயற்சி பலனளிக்கவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும்விரைந்து வந்து ரெட்டியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications