For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டி தேர்தல்: தேர்தல் கமிஷன் மீது பாஜக அதிருப்தி

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட விதம் சரியில்லை. தேர்தல் கமிஷன்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

நாகர்கோவிலில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியதாவது:

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் விஷயத்தில் தேர்தல் கமிஷன் நடந்து கொண்ட விதம் பாஜகவுக்கு திருப்திஅளிக்கவில்லை. தேர்தல் கமிஷனில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என உள்துறை அமைச்சர் அத்வானிகூறியுள்ளார்.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் 14,000 கள்ள ஓட்டுகளை கண்டுபிடித்த தேர்தல் கமிஷன்,ஆண்டிப்பட்டியில் மட்டும் கள்ள ஓட்டுகளை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது யாருக்கும் புரியாத புதிராகஉள்ளது.

ஆண்டிப்பட்டியில் அதிகார துஷ்பிரயோகமும், தேர்தல் விதிமுறைகள் மீறலும் அதிகம் நடக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, தேர்தல் கமிஷன் தேர்தலை முறையாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலை சில கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது ஆரோக்கியமான முடிவு அல்ல. அரசியல்கட்சிகள் தனது ஜனநாயக கடமையில் இருந்து தவறுவது நல்லதல்ல.

தற்போதுள்ள சூழலில் மாநில அரசு ஸ்தம்பித்துள்ளது. முக்கிய முடிவுகளை யார் எடுப்பது என தெரியாமல்அமைச்சர்களே தவிக்கின்றனர்.

இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளுடனும் பாஜகவுக்கு நல்லுறவு இருந்து வருகிறது. அந்த வகையில்அதிமுகவுடனும் நல்ல உறவு நீடித்து வருகிறது. இது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவு. கூட்டணிஉறவு என்பது வேறு என்று இல.கணேசன் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X