For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவில் பூட்டிய வீட்டில் 200 பவுன் நகை, பணம் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 200 பவுன் நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பிரைட் சிங். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி ஜீவா பிரைட் தன் உறவினர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

திருமணம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டதுதெரிய வந்தது.

இதையடுத்து ஜீவா பிரைட் போலீசாரிடம் புகார் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

200 பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என்று ஜீவா பிரைட் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X