For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல், நெல்லையில் பஸ்களுக்கு தீ வைப்பு

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு கும்பல் டவுண் பஸ்சுக்குத் தீ வைத்துவிட்டுஓடிவிட்டது.

திண்டுக்கல்லிலிருந்து செந்துறைக்கு இன்று அதிகாலை 6 மணிக்கு ஒரு டவுண் பஸ் சென்று கொண்டிருந்தது.புகையிலைப் பட்டி அருகே இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட ஒரு கும்பல் அதைநிறுத்தினார்கள். அவர்களும் பயணிகள்தான் என்று நினைத்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

ஆனால் பஸ்சில் ஏறிய அந்த 5 பேரும் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு டிரைவர்-கண்டக்டர் மற்றும்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

பின்னர் பஸ்சிலிருந்து அனைவரையும் கீழே இறக்கிவிட்டு, பஸ்சில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டுஓடிவிட்டனர்.

இதில் பஸ்சின் பெரும்பாலான பகுதி எரிந்து சாம்பலாகிவிட்டது. இதுகுறித்து பேலீசார் விசாரணைை நடத்திவருகின்றனர்.

நெல்லையிலும் பஸ் எரிப்பு:

இதற்கிடையே நேற்று இரவு திருநெல்வேலி அருகே மற்றொரு பஸ் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து திசையன்விளையை நோக்கி இந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்குள்அமர்ந்திருந்த ஒரு கும்பல் திடீரென்று எழுந்து, பயங்கரமான ஆயுதங்களால் பயணிகளை மிரட்டியது.

பின்னர் பஸ்சை நிறுத்தவைத்த அந்தக் கும்பல், பஸ்சுக்குத் தீ வைத்துவிட்டு ஓடியது. அப்போது அந்த வழியாகவந்த மற்றொரு ஆம்னி பஸ்சின் ஜன்னல்களையும் தாக்கி உடைத்துவிட்டு அந்தக் கும்பல் ஓடிவிட்டது.

ஜான் பாண்டியன் கைது காரணமா?

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் சமீபத்தில் ஒரு கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்டார்.

இதை எதிர்த்துத்தான் அக்கட்சித் தொண்டர்கள் இவ்வாறு பஸ்கள் எரித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

பழனி அருகே நேற்றும் ஒரு பஸ் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X