நாளை குடியரசு தினம்: சென்னையில் தீவிர பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

53 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சென்னையில்ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய கட்டடங்களில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை பற்றி தமிழக டி.ஜி.பி. நெய்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் சென்னை மெரீனா கடற்கரையைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கானபோலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மெரீனா கடற்பகுதி முழுவதும் 24 மணி ரோந்துப் பணி நடைபெறும். கடற்கரைச் சாலை முழுவதும்ஆங்காங்கே ரகசிய காமிராக்கள் மூலம் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.போலீசார் மப்டியில் பொதுமக்களோடு கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.

அப்பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களிலிருந்து குடியரசு தின அணிவகுப்பைக் கண்காணிக்கும் பணியிலும்போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கார் நிறுத்தப் பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று நெய்வால் கூறினார்.

15 தீவிரவாதிகள் சென்னையில் ஊடுருவியிருப்பதாக வந்த தகவல் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, இது பற்றி எனக்குஎந்த தகவலும் வரவில்லை என்றும் நெய்வால் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+