For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தின் காலடித் தடங்கள்: தேடுதல் பணி தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வண்டலூரில் சிங்கத்தின் காலடித்தடங்கள் கிடைத்துள்ளதால் சிங்கத்தை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

வண்டலூர் மிருகக்காட்சி சாலை அருகே உள்ள கேளம்பாக்கம் ரோட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிங்கம்ஒன்று நடமாடியதைப் பார்த்ததாகவும் வாகனச் சத்தத்தை கேட்டதும் மிருகக்காட்சி சாலைக்குள் ஓடி விட்டதாகவும்மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் 2 பேர் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மிருகக்காட்சி சாலையை சுற்றி வளைத்தனர். இந்த சிங்கத்தைப் பிடிக்கமிருகக்காட்சி சாலையின் உள்ளே 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன . அந்த கூண்டுகளில்இறைச்சிகளையும், ஆடுகளையும் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கத்தின் காலடித்தடங்கள் கிடைத்துள்ளதால், அந்த சிங்கம் கண்டிப்பாக மிருகக்காட்சி சாலையில்தான் நடமாடிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் போலீசாரும் துப்பாக்கிகளுடன் சிங்கத்தைத் தேடும்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சிங்கம் கிடைக்கும் வரை மிருகக்காட்சி சாலை காலவரையறையின்றி மூடப்படுவதாக மிருகக்காட்சிசாலையயின் இயக்குனர் தியாகி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X