அக்னி ஏவுகணைச் சோதனை: ரஷ்யா ஆதரவு
மாஸ்கோ:
இந்தியா நடத்திய அணுகுண்டு ஏந்திச் செல்லும் புதிய அக்னி ஏவுகணைச் சோதனையை ரஷ்யா ஆதரித்துள்ளது.
இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப் போவது குறித்து எங்களிடம் தான் இந்தியா முதலில் தெரிவித்தது. மிகுந்தஅவசியம் ஏற்பட்டதால் தான் இச் சோதனையை இந்தியா நடத்தியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை.
இந்தியாவின் நிலையை நாங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். இந்தச் சோதனையை இந்தியாவெளிப்படையாகத் தான் நடத்தியுள்ளது. இந்தியர்கள் தங்கள் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
இச் சோதனை மூலம் இந்தியா எந்த சர்வதேச விதிகளையும் மீறவில்லை என்றார்.
தனது பாதுகாப்புக்காகத் தான் இந்த ஏவுகணைச் சோதனையை இந்தியா நடத்தியுள்ளது, பாகிஸ்தானைமிரட்டுவதற்காக அல்ல என ரஷ்ய அரசின் ஆர்.டி.ஆர். டிவியும் அரசு ரேடியோவான மாயக்கும் கூறியுள்ளன.
மேலும் பல சோதனைகளை இந்தியா நடத்தவுள்ளது எனவும் ரஷ்யா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications