ஆண்டிப்பட்டி தேர்தல்: வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு இன்று (திங்கள்கிழமை) கடைசி நாளாகும்.
வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடக்கவுள்ள ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த 17ம்தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டன.
மொத்தம் 33 பேர் இந்தத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இவர்களில் 3 பேரின் மனுக்கள்நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக வேட்பாளர் வைகை சேகர், மதிமுக வேட்பாளர்ஜெயச்சந்திரன் மற்றும் புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 30 பேர் களத்தில் உள்ளனர்.
இவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இன்றைக்குள்ளாக வாபஸ்பெற்றாக வேண்டும்.
இன்று மாலை ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.