For Daily Alerts
Just In
குமரி to
நாகர்கோவில்:
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பயணிகள் படகு விடுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகமாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முதல் கட்டமாக கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வரை பயணிகள் படகு சேவை நடத்தப்படும்.
பின்னர் படிப்படியாக இப்போக்குவரத்து சென்னை வரை நீட்டிக்கப்படும்.
மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவைப் போல கன்னியாகுமரியிலும் ஆண்டுதோறும்பொங்கல் விழாவை நடத்தவும் அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள தமிழக அரசின் சுற்றுலா விடுதிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மற்றவிடுதிகள் லாபத்தில் உள்ளன என்றார் சரோஜா.
Comments
Story first published: Monday, January 28, 2002, 5:30 [IST]