சென்னையில் டீக்கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர் கைது
சென்னை:
சென்னையில் டீக்கடையை சூறையாடி டீக்கடை ஊழியர்களையும் தாக்கிய திமுக கவுன்சிலர் கைதுசெய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சியின் 141வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கென்னடி. இவரிடம் கார் டிரைவராகபணியாற்றுபவர் கருணா.
வேளச்சேரி மெயின் ரோட்டில் இருக்கும் கோபால் என்பவரது டீக்கடையில் கடனுக்கு டீ குடித்து விட்டு மொத்தமாகமாத சம்பளத்தில் பணம் கொடுப்பது கருணாவின் வழக்கம். ஆனால் சில மாதங்களாக கடன் பாக்கியைகொடுக்காமல் இருந்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு வழக்கம் போல் அந்த டீக்கடைக்கு கருணா டீ குடிக்கச் சென்றுள்ளார். ஆனால்கடையின் ஊழியர்கள் பழைய பாக்கியை தராமல் மீண்டும் கடன் தர முடியாது என்று கூறிவிட்டனர். இதனால்அவர்களிடம் தகராறு செய்துள்ளார் கருணா.
பின்னர் கோபத்துடன் கென்னடியிடம் சென்ற கருணா, டீ கடைக்காரர்கள் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகக்கூறினார். இதையடுத்து கென்னடியும், கருணாவும் கோபாலின் கடைக்குச் செனறு டீக்கடையை அடித்து நொறுக்கிஅங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து இருவர் மீதும் கோபால் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த போலீசார் கவுன்சிலர்கென்னடி, கருணா ஆகிய 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications