வடமாநில நதிகளை தமிழக நதிகளுடன் சேர்க்க அரசு முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வடமாநில நதிகளை தமிழக நதிகளுடன் சேர்க்க தமிழக அரசு முயன்று வருவதாக தமிழக நிதியமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொண்ட பொன்னையன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள். இவர்களுக்குபோதிய தண்ணீர் வசதி இல்லை.
மேலும் பருவத்திற்கேற்ப இவர்கள் பயிர்களை பயிர் செய்யவேண்டுமெனில் தண்ணீர் வசதி அதிகம் தேவை.
தமிழக விவசாயிகளைப் பொறுத்த வரை காவிரியை மட்டுமே நம்பியுள்ளனர். வடமாநில நதிகளை தமிழகநதிகளோடு இணைத்து விட்டால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.
இதுகுறித்து தமிழக அரசுடன் தீவிரமாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்று பொன்னையன்கூறினார்.












Click it and Unblock the Notifications