ஈரோட்டில் இளம்பெண்கள் தற்கொலை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாக தமிழக போலீஸ் தலைமைநிலைய ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
ஈரோட்டில் போலீஸ் கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது கவலை தருவதாக உள்ளது. இந்த விபரீத பழக்கம் தொடருவதை தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் முன்வர வேண்டும்.
சமீபத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் உயிருடன்எரித்துக் கொன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டு நெஞ்சமே பதறியது.
திருமணங்கள் வணிகமயமாக்கப்படக் கூடாது.கணவர்கள் தங்களது மனைவிகளை அடிமை போல கணவன்மார்கள்நினைக்கக் கூடாது. சுக-துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் பார்ட்னராகவே அவர்களை மதிக்க வேண்டும்என்றார் திலகவதி.












Click it and Unblock the Notifications