சென்னையில் பீச்-தாம்பரம் அகல ரயில் பாதை துவக்கம்
சென்னை:
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) முதல் கடற்கரை-தாம்பரம் அகல ரயில் பாதையில் மின்சார ரயில்போக்குவரத்து துவங்கியது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இதுவரை மீட்டர்கேஜ் பாதையில் மட்டுமே ரயில்கள் விடப்பட்டுவந்தன.
இந்நிலையில் இந்த இரு ரயில் நிலையங்களுக்கும் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து,இன்று முதல் போக்குவரத்து துவங்கியது. இன்று காலை 8.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து முதல் ரயில்கடற்கரைக்குக் கிளம்பியது.
முதல் ரயில் என்பதால் இன்று இதில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இந்த அகல ரயில் பாதைத் திட்டத்தின் மூலம் இரு பகுதிகளிலும் தலா 9 ரயில்கள் தினமும் ஓடும்.
இந்த அகல ரயில் பாதை ரயிலில் வழக்கமான ரயிலைவிட கூடுதலாக 1,000 பயணிகள் செல்ல முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் சாதாரண ரயிலைவிட இந்த ரயிலின் பயண நேரமும் 10 நிமிடங்கள் வரை குறைந்துள்ளது.குரோம்பேட்டை, மாம்பலம், கோட்டை உள்பட சில முக்கிய நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும்.