ஒரு ஓட்டுக்கு ரூ.500 வரை கொடுக்க அதிமுக திட்டம்: வைகோ சாடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக மதிமுகபொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வைகோ இன்று (திங்கள்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுகவினரின் அதிகார துஷ்பிரயோகம் செயல்பட ஆரம்பித்து விட்டது.
ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.100 முதல் ரூ.500 வரை கொடுப்பதற்கு அதிமுகவினர் திட்டம் தீட்டியுள்ளதாக எனக்குத்தகவல் வந்துள்ளது.
இதற்கான ஏஜென்டுகளையும் அதிமுக தலைமை நியமித்து விட்டது.
இனி எந்த அளவுக்குத் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நீங்களே நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications