வீரப்பன் சரணா? - தமிழக அரசு மறுப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் இன்னும் 2 நாட்களில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகளைதமிழக அரசு அதிகாரி ஒருவர் இன்று (திங்கள்கிழமை) மறுத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன் சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விருப்பம் தெரிவித்து ஒரு வீடியோ கேசட்டை ஒருதமிழ் பத்திரிக்கை ஆசிரியருக்கு அனுப்பியிருந்தான்.
அதன் பிறகு சில தினங்களுக்கு முன்பு வீரப்பன் மாதேஸ்வரன் மலையில் சரணடைய இருப்பதாகவும் அதற்காகஅதிரடிப்படை போலீசார் அந்த இடத்தில் காத்து இருப்பதாகவும் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் இப்போது இன்னும் 2 நாட்களில் வீரப்பன் சரணடைய தமிழக அரசிடம் விருப்பம்தெரிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் வீரப்பன் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தங்களுக்குதகவல் எதுவும் வரவில்லை என்றும் பெயர் சொல்ல விரும்பாத தமிழக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கைகள் தான் இது பற்றி வதந்திகள் கிளப்பியுள்ளன. வீரப்பன் கடந்த மாதம் தமிழ் பத்திரிக்கைக்கு கேசட்கொடுத்து அனுப்பிய பிறகு இந்த விவகாரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் அந்தஅதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications