ஆண்டிப்பட்டி தேர்தல்: களத்தில் 24 வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்திருந்தவர்களில் 6 பேர் இன்று (திங்கள்கிழமை)தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து இத்தொகுதியில் மொத்தம் 24 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக மற்றும் மதிமுக ஆகிய 2 கட்சிகளின் மாற்று வேட்பாளர்களும் 4 சுயேச்சைகளும்தான் இன்று தங்கள்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
வாபஸ் பெற்ற 6 பேருமே கடைசி நாளான இன்றுதான் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுகவின் வைகை சேகர், மதிமுகவின் ஜெயச்சந்திரன்மற்றும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 24 பேர் ஆண்டிப்பட்டி தேர்தல் களத்தில் உள்ளனர்.
அதிகாரப்பூர்வமான இறுதி வேட்பாளர் பட்டியலும் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications