ராமர் கோவில்: அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாகஇருந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்துதான் தன்னால் இதுகுறித்து மேற்கொண்டு செயல்பட முடியும் என்றுவாஜ்பாய் கூறிவிட்டார்.
ஆனாலும் நிலத்தை மத்திய அரசு தந்தாலும், தராவிட்டாலும் திட்டமிட்டபடி மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும்பணி தொடங்கப்படும் என்றும் அந்த அமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்த பிரச்சனை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. இதனால் அயோத்தி பிரச்சனையைப்பற்றி விவாதிப்பதற்காக வாஜ்பாய் இன்று மத்திய அமைச்சரவையைக் கூட்டுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி எதுவும்அறிவிக்கப்படவில்லை என்று மத்தியஅமைச்சரவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பட்ஜெட் பற்றி விவாதிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும் இன்று நடைபெறுவதாக இருந்தது.இந்தக் கூட்டமும் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.