For Daily Alerts
Just In
ராமர் கோவிலை கட்டியே தீருவோம்: வி.எச்.பி. உறுதி
டெல்லி:
மத்திய அரசு இனிமேல் எந்த முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் திட்டமிட்டபடி மார்ச் 12ம் தேதி ராமர் கோவில்கட்டுமானப் பணிகளைத் துவக்கி விடுவோம் என்று இன்று (செவ்வாய்க்கிழமை) விஸ்வ ஹிந்து பரிஷத்அமைப்பினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு மேலும் காலக்கெடு கொடுக்கப் போவதில்லை என்று இவ்வமைப்பின்செயலாளர் பிரவீண் தொகாடியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவான மார்ச் 12ம் தேதிக்குள் சர்ச்சைக்குரிய நிலத்தை மத்திய அரசுகொடுக்கவில்லையென்றால், அன்றைய தினமே ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என்றார் தொகாடியா.
Comments
Story first published: Monday, January 29, 2001, 5:30 [IST]