For Daily Alerts
Just In
மும்பையில் 1,000 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பல்
மும்பை:
மும்பையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடிசைகள்எரிந்து சாம்பலாயின. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
மளமளவென்று தீ பரவியதால், 12 தீயணைப்பு வண்டிகளும் 6 ஜம்போ டேங்கர்களும் சேர்ந்தும்கூட நீண்ட நேரம்கழித்துதான் தீயை அணைக்க முடிந்தது.
அதற்குள் சுமார் 1,000 குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டன. இச்சம்பவத்தில் 6 பேர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர்.
தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை
Comments
Story first published: Tuesday, January 30, 2001, 5:30 [IST]