For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பையில் 1,000 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பல்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

மும்பையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 1,000க்கும் மேற்பட்ட குடிசைகள்எரிந்து சாம்பலாயின. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

வடகிழக்கு மும்பையில் சிவாஜி நகருக்கு அருகே உள்ள சஞ்சய் காந்தி நகரில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்குஇந்தத் தீவிபத்து ஏற்பட்டது.

மளமளவென்று தீ பரவியதால், 12 தீயணைப்பு வண்டிகளும் 6 ஜம்போ டேங்கர்களும் சேர்ந்தும்கூட நீண்ட நேரம்கழித்துதான் தீயை அணைக்க முடிந்தது.

அதற்குள் சுமார் 1,000 குடிசைகள் எரிந்து சாம்பலாகி விட்டன. இச்சம்பவத்தில் 6 பேர் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர்.

தீவிபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X