அமெரிக்காவிடம் குற்றவாளிகள் பட்டியலை தந்த பாக்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானிடம் இந்தியா 20 தீவிரவாதிகளின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்துள்ளது போலவே, அமெரிக்காவிடம்8 குற்றவாளிகளின் பட்டியலைக் கொடுத்து, அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளது பாகிஸ்தான்.
இந்த 8 குற்றவாளிகளும் பாகிஸ்தானில் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளில் தேடப்படுகிறார்கள். அவர்கள்இப்போது அமெரிக்காவில்தான் ஒளிந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் அமெரிக்காவில்தான் ஒளிந்திருப்பதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலும் கூறியுள்ளது.அவர்களைப் பிடிப்பதற்கான வாரண்டும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அமெரிக்காவில் இருந்தால் கண்டிப்பாக ஒப்படைத்து விடுவோம் என்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம்முல்லர் உறுதி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் போரில் விவகாரத்தில் உதவியுள்ளதால், கண்டிப்பாக இவர்களை அமெரிக்கா தன்னிடம்ஒப்படைக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாநில முன்னாள் முதல்வர் சையத் அப்துல்லா ஷா, நிகாத் பரி, டாக்டர் ஷாஜத் முனாவர்,நய்யார் பரி, முகமது சல்மான் பரூக்கி, ஷேக் வாரிஸ், டவுசிப் காவார் ஷேக் மற்றும் ஷகீல் அமீர் ஷேக் ஆகிய 8பேரும்தான் இந்தப் பட்டியலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications