வீரப்பன் பிடிபட்டதாகத் தகவல் இல்லை: பன்னீர்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடிபட்டு விட்டதாக இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை என்று தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் இன்று (புதன்கிழமை) கூறினார்.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று காலை சென்னை மெரீனா அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்திய பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்புக்கான உறுதி மொழியை எடுத்துக்கொண்டார்.
பின்னர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடிபட்டு விட்டதாக இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை.
அவன் பிடிபட்டது தெரிய வந்தால் உடனடியாக அதை நாங்கள் அறிவித்து விடுவோம்.
ஆனால் இப்போது இதுகுறித்த தகவல் எதையும் தெரிவித்தால், அது வீரப்பனைத் தேடும் நடவடிக்கைகளுக்குக்குந்தகம் விளைவிக்கும் என்றார் பன்னீர்செல்வம்.
இதற்கிடையே வீரப்பனின் இருப்பிடத்தை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்திருக்கும் தகவலை தமிழக உள்துறைசெயலாளர் நரேஷ் குப்தா உறுதிப் படுத்தியுள்ளார்.
கடும் உணவுப் பஞ்சத்தால் அவதிப்படும் வீரப்பனுக்கு ஆஸ்த்மா நோயும் பார்வைக் கோளாறும் இருப்பதாகவும்கூறப்படுகிறது. இதனால் மாலை நேரமானால் அவனால் நடமாட முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதனால் வீரப்பனை விரைவில் பிடிப்பதற்கு ராணுவ நடவடிக்கைக்கு இணையான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் நரேஷ் குப்தா தெரிவித்தார்.