திரிசூல் ஏவுகணையையும் சோதித்தது இந்தியா
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்ல வாய்ந்த அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டு ஒருவாரம்கூட ஆகாத நிலையில் தற்போது திரிசூல் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துப்பார்த்துள்ளது.
கொச்சி அருகே நின்று கொண்டிருக்கும் ஐ.என்.எஸ். துரோணாச்சார்யா என்ற போர்க் கப்பலிலிருந்து இந்த 2திரிசூல் ஏவுகணைகளும் ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன.
இந்த திரிசூல் ஏவுகணை சுமார் 9 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாழ்வாகப் பறந்து செல்லும் விமானங்களைத்தாக்கும் திறன் கொண்டதாகும்.
எதிரிகளின் விமானங்களை கடல் பகுதியிலும் திரிசூல் ஏவுகணை பறந்து சென்று தாக்குவதைச் சோதிப்பதற்காகவேஇந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமைதான் (ஜன.25) ஒரிசாவில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட அக்னிஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications