வீரப்பன் இருக்கும் வனப் பகுதி சுற்றி வளைப்பு: டி.ஜி.பி. தகவல்
சென்னை:
சத்தியமங்கலம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பன் இருக்கும் வனப் பகுதி முழுவதையும் அதிரடிப் படையினர் சுற்றிவளைத்து விட்டதாக தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறியுள்ளார்.
ஒரு செய்திப் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் நெய்ல்வால் இவ்வாறு கூறியுள்ளார்.
வீரப்பனைத் தேடும் அதிரடிப் படையினரின் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் நெய்ல்வால்தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பழங்குடி மக்கள் தந்த தகவலின் அடிப்படையில் வீரப்பன் இருக்கும் இடத்தைமுன்னாள் தமிழக டி.ஜி.பியான தேவாரம் தலைமையிலான அதிரடிப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகக்கூறப்படுகிறது.
வீரப்பன் உடல்நலக் குறைவால் மிகவும் அவதிப்படுவதாகவும் அவனை விரைவில் பிடித்து விடுவோம் என்றும்நெய்ல்வால் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிரடிப் படையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பியும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருமானவிஜயகுமார் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனின் முக்கியக் கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனை அதிரடிப் படையினர் பிடித்து விட்டதாகவும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications