அயோத்தி விவகாரம்: விலகிச் செல்லும் பாஜக
டெல்லி:
அயோத்தி பிரச்சனைக்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது போல் பாஜக காட்டத்தொடங்கி விட்டது.
ராமர் கோவிலை அயோத்தியில் கட்டுவதுதான் எங்கள் கனவு, லட்சியம். இதற்காக நாங்கள் வாஜ்பாய்தலைமையிலான மத்திய அரசைத் தியாகம் செய்யவும் தயார் என்றும் வி.எச்.பி. அமைப்பினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அயோத்தி விவகாரத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காட்டத்தொடங்கிவிட்டது பாஜக.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியான பாஜகவே அக்கூட்டணியின் கொள்கையை மீறலாமாஎன்று கேட்டுள்ளார் அக்கட்சியின் தலைவரான ஜனா. கிருஷ்ணமூர்த்தி.
இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் பேசிய ஜனா, இவ்விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறினார்.
மேலும் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் அல்லது நீதிமன்றத்தின் உத்தரவுக்குக்காத்திருக்க வேண்டும் என்றும் ஜனா கூறினார்.
ஆனால் இனி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையே இல்லை என்று வி.எச்.பி. கூறியது குறித்து கேட்டதற்கு, அதுஅவர்களுடைய கருத்து என்று கூறினார் ஜனா.












Click it and Unblock the Notifications