சிசு கண்டறியும் கருவி வைத்திருந்த 6 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய உதவும் கருவியை வைத்திருந்த 6 தனியார்மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக நலத்துறை செயலாளர் சையத் முனீர் ஹோதாகூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
சிசுவை அடையாளம் காணும் கருவியைப் பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தக் கருவியை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் இதுவரை 6 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் 4 மருத்துவமனைகள் சென்னையைச் சேர்ந்தவை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications