ஜெ. ஜெயித்தால் மிக மோசமான ஆட்சி அமையும்: இளங்கோவன்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெற்றால், இதுவரை இல்லாத மோசமான ஆட்சியை தமிழகம் சந்திக்கும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஜெயலலிதா வெற்றி பெற்றால் தமிழகத்தில் இது வரை இல்லாத மோசமான ஆட்சி அமையும். எதிர்க்கட்சிள் , அரசுஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என்று அனைவருமேகடுமையாகப் பாதிக்கப்படுவர்.
ஆண்டிப்பட்டி தேர்தலின் பின்னால் அரசியல் காரணமும், பின்னணியும் உண்டு. பாஜகவுக்கும், அதிமுகவும் ரகசியஉறவு இருப்பது உண்மை.
ஆண்டிப்பட்டியில் குளறுபடி காரணமாக நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். அதே காரணத்துக்காக திமுகநீதிமன்றம் சென்றுள்ளது. தேர்தல் கமிஷனின் எல்லா முடிவுகளையும் நாங்கள் எதிர்க்க மாட்டோம். தவறுசெய்யும்போது தான் எதிர்ப்போம்.
ஆண்டிப்பட்டி தேர்தலைப் புறக்கணத்துள்ளதால், நாங்கள் திமுகவுக்கோ, அதிமுகவுக்கோ வாக்களிக்க மாட்டோம்.
நான் திமுக சார்புடையவன் என்பது அதிமுக செய்யும் விஷமப் பிரச்சாரம். நான் எப்போதும் திராவிடக் கட்சிகளைஎதிர்க்கிறேன். அக்கட்சிகளால் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்று இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications