For Daily Alerts
Just In
திருத்தணியில் பெரியார் சிலை வைக்க முயன்ற 27 திராவிடர் கழகத்தினர் கைது
திருத்தணி:
திருத்தணியில் பெரியார் சிலையை நிறுவ முயன்ற 27 திராவிடர் கழக உறுப்பினர்கள் இன்று (வியாழக்கிழமை)கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை திருத்தணியின் மையப் பகுதியில் திராவிடர் கழக உறுப்பினர்கள் திடீரென்று கூடினர்.
பின்னர் அவர்கள் தங்களோடு கொண்டு வந்திருந்த பெரியார் சிலையை ஒரு இடத்தில் நிறுவ முயன்றனர்.இதையடுத்து அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பெரியார் சிலையை நிறுவ முயன்ற 27 திராவிடர் கழக உறுப்பினர்களைக்கைது செய்தனர். பெரியார் சிலையையும் போலீசார் கைப்பற்றினர்.
திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, January 31, 2002, 5:30 [IST]