For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் சரணடைய வாய்ப்பில்லை: விஜயகுமார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் விஜயகுமார்இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் தெரிவித்தார்.

வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழக அதிரடிப் படையின் முன்னாள் ஐ.ஜியுமான விஜயகுமார்சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டு நேற்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் வீரப்பன் தொடர்பாக விஜயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் வீரப்பன் சரணடைவது தொடர்பாக எந்தவிதமான தகவலும் வரவில்லை.

மேலும் 3 பேர் கொண்ட தூதுக் குழுவினர் காட்டுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் எந்தத்தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை.

வீரப்பன் சரணடைவதற்கான வாய்ப்பே இல்லை. அவனை சரணடையச் செய்வதற்காக யாரும் தூது போகவேண்டிய அவசியமும் இல்லை.

அந்த அடர்ந்த காட்டுக்குள் வீரப்பனைப் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் என்றும் எனக்குத்தோன்றவில்லை.

சேத்துக்குளி கோவிந்தன் உள்பட 2 பேர் மட்டுமே வீரப்பனுடன் இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் எங்கே உள்ளனர் என்பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் அப்பகுதியில்உள்ள கிராம மக்களும் அதிரடிப் படையினருக்கு நன்றாக உதவுகிறார்கள்.

நான் சொந்த வேலையாக கோயம்புத்தூர் போயிருந்தேன். அப்போது சத்தியமங்கலம் காட்டுக்கும் சென்றேன்.அப்போது அதிரடிப் படையினருடன் சில முக்கியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டேன் என்றார் விஜயகுமார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X