For Daily Alerts
Just In
நெற்றிக்கண்ணில் பிரகாஷின் ஆபாசப் படங்கள்: இதழ்களை பறிமுதல் செய்ய உத்தரவு
சென்னை:
டாக்டர் பிரகாஷ் இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆபாசப் படங்களை அப்படியே பத்திரிக்கையில் வெளியிட்டநெற்றிக்கண் வார இதழைப் பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மகளிர் அமைப்பு ஒன்று வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அதில், பிரகாஷ் எடுத்தபுகைப்படங்களை அப்படியே கொஞ்சமும் மாற்றம் செய்யாமல் அப்படியே நெற்றிக்கண் வெளியிட்டுள்ளது.
இது போன்ற ஆபாசப் படங்களை பத்திரிக்கையில் வெளியிடுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.எனவே அந்தப் பத்திரிக்கையில் பிப்ரவரி 1ம் தேதி இதழ்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மகளிர்அமைப்பு கோரியிருந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் பிபிரவரி 1ம் தேதியிட்டநெற்றிக்கண் இதழ்களைப் பறிமுதல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
Comments