ஹஜ் யாத்திரை: சென்னையில் இருந்து முதல் கட்டமாக 410 பேர் பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 410 ஹஜ் யாத்ரீகர்கள் தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றனர்.

முஸ்லீம்களின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. வரும் தோறும் இந்த புனிதப் பயணம் பக்ரீத்பண்டிகையையொட்டி நடக்கும். இந்த முறை தமிழகத்திலிருந்து 2,800 பேர் ஹஜ் யாத்திரை செல்கின்றனர்.

இவர்களில் முதல் பிரிவில் 410 பேர் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனர்.

இரவு 10.40 மணிக்கு இந்த முதல் விமானம் கிளம்பியது. தமிழக ஹஜ் கமிட்டித் தலைவர் அமைச்சர் அன்வர்ராஜா, செயலாளர்அலாவுதீன், லியாவுதின் சேட் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் அடங்கிய குழு புனித யாத்திரை செல்பவர்களை வாழ்த்தி வழிஅனுப்பினர்.

புனித யாத்திரை செல்பவர்கள், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு சென்று அங்கிருந்து மெக்கா செல்கிறார்கள்.மெக்காவில் 5 நாள் வழிபாடு நடத்திய பின் மெதீனா செல்கிறார்கள். அங்கு பக்ரீத் பண்டிகை முடியும் வரை தங்கியிருந்துவழிபாடுகள் நடத்துவார்கள்.

அதன் பின்னர் ஜெட்டா வந்து பின்னர் சென்னை திரும்புவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+