லண்டன் ஹோட்டல் வழக்கு: பிப். 6ல் விசாரணை துவங்குகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதா லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கின் விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில் பிப்ரவரி 6ம் தேதிதொடங்குகிறது.
லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் ஜெயலலிதாவும், தினகரனும் ரூ. 43 கோடி அளவுக்கு மோசடி
செய்துள்ளதாக கூறி திமுக ஆட்சிக்காலத்தில் இவர்கள் மீது சென்னை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை முதலாவது தனி நீதிமன்றம் விசாக்க வேண்டும் என்று கடந்த 10ம்
தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
முதலாவது தனி நீதிமன்றத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கு வருகிற 6ம் தேதி துவங்குகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தனிநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications