For Daily Alerts
Just In
விபத்திலிருந்து தப்பினார் அதிமுக எம்.எல்.ஏ.
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சுப்பையா பாண்டியன் சாலை விபத்திலிருந்து உயிர்தப்பினார்.
சுப்பையா பாண்டியன் தனது காரில் மதுரையிலிருந்து, கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அவரது காரை சின்னமுத்துஎன்பவர் ஓட்டிச் சென்றார். கார் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம் என்ற இடத்தில் குறுகிய சாலையில் சென்றபோது எதிரில் வந்த பஸ்மீது மோதும் நிலை உருவானது.
இதையடுத்து பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக காரை, அவசரமாக சாலையை விட்டு கீனே இறக்கினார் டிவைர் சின்னமுத்து.அப்போது சாலையோரம் இருந்த கல் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஆனால் எம்.எல்.ஏவும், டிரைவரும் காயமின்றித் தப்பிவிட்டனர்.
Comments
Story first published: Saturday, February 2, 2002, 5:30 [IST]