தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை தடுப்பேன்: ரணில்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வட இலங்கைப் பகுதியில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் அடக்குமுறைகளையும் தடுக்கநடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.

மீன் பிடிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளைக் கண்டித்து யாழ்பாணத்தில் தமிழ் மீனவர்கள் தொடர் போராட்டங்கள்நடத்தி வருகின்றனர். யாழபாண மாவட்டத் தலைமை அலுவலக்தை 3 நாட்களாக மீனவர்கள்முற்றுகையிட்டுள்ளனர்.

மீன் பிடிக்க நடுக்கடலுக்குச் செல்லவும் நீண்ட நேரம் மீன் பிடிக்கவும் யாழ்பாண மீனவர்களுக்கு பல ஆண்டுகளாகஅனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதில் சில சலுகைகளை ரணில் அரசு அறிவித்துள்ளபோதிலும் மேலும்சலுகைகள் கோருகின்றனர் மீனவர்கள்.

அதே போல கொழும்பு உள்ளிட்ட இடங்களில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களும் தங்கள் மீதானஅடக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பேச்சுவார்த்தை மூலம் இனப் பிரச்சனையைத் தீர்க்க தீவிரம் காட்டி வரும் ரணில் விக்கிரமசிங்கே தமிழர்கள்வசிக்கும் பகுதிகளில் இருந்த பொருளாதாரத் தடைகளை நீக்கினார். மேலும் தமிழர் பகுதிகளுக்கு உணவு கொண்டுஇருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் கொழும்புவில் முன்னாள் அமைச்சர் எ.சி.எஸ். ஹமீத் நினைவு நாள் விழாவில் பேசிய அவர் அவர்கூறுகையில்,

வன்னி பகுதிக்கு உணவு கொண்டு செல்ல அனுமதித்து வருகிறோம். மேலும் உணவுப் பொருள்கள் அங்குஅனுப்பப்படும். சில பகுதிகளுக்கு போதுமான உணவுப் பொருள்கள் போய்ச் சேரவில்லை. தமிழர்களுக்கு எதிரானஅனைத்து அடக்குமுறைகளையும் படிப்படியாகப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+