கிராமத்துக்குள் நுழைந்த வீரப்பனின் கூட்டாளி
அந்தியூர்:
வீரப்பனுக்குத் தேவையான பலசரக்குப் பொருள்கள் வாங்க அவனது கூட்டாளி ஒருவன் மாதேஸ்வரன் மலைப்பகுதி கிராமத்துக்குள் நுழைந்ததாக தகவல் வந்ததையடுத்து அவனைப் பிடிக்க தீவிர முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதேஸ்வரன் மலைப் பகுதியை அதிரடிப் படை சுற்றி வளைத்து அவனுக்கு உணவு செல்லும் வழியையும்அடைத்துவிட்டனர். இதனால், உணவுப் பொருள்கள் இல்லாமல் தவித்து வருகிறது வீரப்பன் கும்பல்.
இந் நிலையில் அவனுக்கு உணவு வாங்கிச் செல்ல அவனது கூட்டாளிகளில் ஒருவன் மலையோர கிராமத்துக்குவந்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து அதிரடிப் படையினர் அங்கு விரைந்தனர்.
பல கிராமங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் அதிக அளவிலான போலீஸ்இன்பார்மர்களையும் நிறுத்தி வைத்துள்ளது அதிரடிப்படை.
மேலும் சமீபத்தில் பிடிபட்ட வீரப்பனின் நெருங்கிய உறவினரான சின்னப்பொன்னனும் வீரப்பன் மறைவிடங்ள்குறித்து பல தகவல்களை வழங்கியுள்ளார். இதையடுத்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளதுஅதிரடிப் படை.
அங்கு அவன் காட்டும் இடங்களில் எல்லாம் அதிரடிச் சோதனையில் அதிரடிப் படை ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications