தாராபுரம் அருகே வேன்-லாரி மோதலில் 2 பேர் பலி
தாராபுரம்:
கறிக்கோழி ஏற்றி வந்த டெம்போ வேனின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் ஒரு தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையிலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு டெம்போ வேன் ஒன்று அறந்தாங்கிக்கு சென்றுகொண்டிருந்தது.
வேன் தாராபுரம் அமராவதிப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, கோவையிலிருந்து தூத்துக்குடிச் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதியது.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ஆறுமுகம் மற்றும் சுமை தூக்கும் கூலி ஆள் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தாராபுரம் அரசு மருத்துவனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1000க்கும் மேற்பட்ட கோழிகள் இந்த விபத்தில் நசுங்கி இறந்துள்ளன. இந்த விபத்துக் குறித்து போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications