கூட்டாளியை வைத்து வீரப்பனைப் பிடிக்க முயற்சி
சென்னை:
அதிரடிப்படை போலீசாரின் பிடியில் சிக்கிய சந்தனக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளியை வைத்து வீரப்பனைப்பிடிக்க தமிழக, கர்நாடக அதிரடிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதேஸ்வரன் மலையில் ஒளிந்து கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்துஅதிரடிப்படை போலீசார் அப்பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர். வீரப்பனைப் பிடிக்க பல்வேறு உத்திகளைஅவர்கள் கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போலீசாரிடம் கைதான சின்னக் கொண்டான் என்ற வீரப்பனின் கூட்டாளி மூலம் போலீசாருக்குசில தகவல்கள் கிடைத்தன.
அந்தத் தகவலின் அடிப்படையில் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளைச் செய்து கொடுக்கும்ஒருவர் குறித்து போலீசாருக்குத் தெரிய வந்தது. அவரைப் பிடித்தால் வீரப்பன் தொடர்பான பல தகவல்கள்கிடைக்கலாம் என்று சின்னக் கொண்டான் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தர்மபுரி மாவட்டம் கொங்கரப்பட்டி என்ற கிராமத்திற்குச் சென்ற அதிரடிப்படை போலீசார் அங்குசின்னக் கொண்டான் கூறிய நபரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அவரும் வீரப்பனின் கூட்டாளிதான்என்பது தெரிய வந்தது.
அவர் பல தகவல்களை போலீசாருக்குத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் முக்கிய தகவல்களைப்பெறுவதற்காக மாதேஸ்வரன் மலை அதிரடிப்படை முகாமிற்கு அந்த நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வீரப்பனுடன் தற்போது 3 பேர் மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது என அதிரடிப்படை வட்டாரத்தில்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications