இலங்கையில் சுதந்திர தின கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் இன்று (திங்கள்கிழமை) 54வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கொழும்பில் இன்று நடந்த வண்ணமிகு விழாவிற்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தலைமை தாங்கினார்.

இனப்பிரச்சனைத் தீர்வு காணும் அரசியல் கலாச்சாரம் இப்போதைய தேவை என்று சந்திரிகா கூறினார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தான் தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை தொடரப்போவதாகவும், இது தொடர்பாக தற்போதைய ரணில் விக்கிரமசிங்கேயின் அரசுக்கு தன்னுடைய அனைத்துஉதவிகளையும் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சந்திரிகா தெரிவித்தார்.

பின்னர் 21 குண்டுகள் முழக்கத்துடன் தொடங்கி நடந்த ராணுவ அணிவகுப்பையும் சந்திரிகா பார்வையிட்டார்.

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நம்பிக்கைகள் பிறந்துள்ளன என்றும் இதன்மூலம் நாட்டில் மீண்டும்அமைதி நிலவும் என்றும் பிரதமர் ரணில் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2,500 கைதிகள் விடுதலை:

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறு குற்றங்கள் காரணமாக இலங்கை முழுவதிலும் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள 2,500 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதாக சந்திரிகா ஏற்கனவே இதற்கான உத்தரவைப்பிறப்பித்து விட்டார்.

சென்னையில் கொண்டாட்டம்:

இதற்கிடையே சென்னையில் இலங்கை சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கை கொடி ஏற்றப்பட்டு, அந்நாட்டுப் பிரதமர் ரணிலின் சுதந்திரதின உரை வாசிக்கப்பட்டது.

இவ்விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+