சென்னையில் பட்டப்பகலில் அரசு ஊழியர் அரிவாளால் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ஒயிட்ஸ் ரோடில் வெளிநாட்டு வர்த்தக மைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரை ஆட்டோவில்வந்த மர்ம கும்பல் இன்று (திங்கள்கிழமை) காலை வெட்டிக் கொலை செய்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் ரோட்டில் வெளிநாடு வர்த்தக மைய அலுவலகம் ஒன்று உள்ளது.இங்கு ஏகாம்பரம் என்ற ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

இவர் கே.கே. நகரில் குடியிருக்கிறார். அங்கு அவர் பொது மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். மேலும்அந்தப் பகுதியில் உள்ள ரவுடிகளைப் பற்றியும் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஒயிட்ஸ் ரோடில் உள்ள அலுவலகத்துக்கு சென்றுக் கொண்டிருந்தார்.அலுவலகத்துக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாளால்அவரைத் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

இந்தத் தாக்குதலால் ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் திருவல்லிக்கேணி போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரால் பாதிக்கப்பட்ட ஏதாவது ஒரு ரவுடிதான் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என்று கருதும் போலீசார்,கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+