விரைவில் மத்திய அமைச்சராகிறார் திருநாவுக்கரசு
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ள எம்ஜிஆர் அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசுக்கு பல்வேறுஉறுதிமொழிகளை பாரதீய ஜனதாக் கட்சி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் எம்.ஜி.ஆர். அதிமுக கடந்த 1ம் தேதி பாரதீய ஜனதாக் கட்சியில்இணைந்தது. இந்த இணைப்பு தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கு மிகப் பெரும் பலத்தைத் தேடித் தரும் என்றுபா.ஜ.க. தலைமை கருதுகிறது.
இதையடுத்து திருநாவுக்கரசுக்கு சந்தோஷம் தரும் வகையில் பல்வேறு உறுதிமொழிகளை பா.ஜ.க.கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி விரைவில் திருநாவுக்கரசு மத்திய இணை அமைச்சராக்கப்படுவார். அவருக்கு நல்லதொரு துறை ஒன்றுஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆர். அதிமுகவில் துணை பொதுச் செயலாளராக இருந்த நடிகை லதாவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவிஅளிக்கப்படும். அவரது கலைத்துறை சேவையைக் கருத்தில் கொண்டு இந்த பதவி அளிக்கப்படுகிறது.
இதுதவிர எம்.ஜி.ஆர். அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலருக்கும் அகில இந்திய அளவில் முக்கியமானவாரியங்கள் அல்லது கழகங்களில் பொறுப்பு அளிக்கப்படும்.
திருநாவுக்கரசை பா.ஜ.க.வுக்குக் கொண்டு வருவதில் பிரமோத் மகாஜன், வெங்கையா நாயுடு ஆகியோர் முக்கியப்பங்கு வகித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இணைப்பு விழாவுக்குப் பின் திருநாவுக்கரசு மும்பை சென்று விட்டார். அங்கு நடக்கும் மாநகராட்சித் தேர்தலில்பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.












Click it and Unblock the Notifications