துருக்கியில் பூகம்பம்: 45 பேர் பலி
போல்வாடின்:
துருக்கி நாட்டின் மேற்குபகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பூகம்பத்தால் 45 பேர் பலியாகினர்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பூகம்பத்தால் பீதியடைந்த மக்கள் ஜன்னல் வழியாகவும், பால்கனி வழியாகவும் பயந்து குதித்தனர். இதையடுத்துஇதுவரை 45 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதிப்படைந்துள்ளன.போல்வாடினுக்கு அருகில் உள்ள சுல்தான்டாஹி என்ற பகுதியில் இடிபாடுகளுக்கிடையே 11 பேர்மாட்டியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த பூகம்பத்தால் 100 தொழிற்கூடங்கள், பல மசூதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை என்பதால் இந்தபகுதிகளில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கட்டுமானத்துறை அமைச்சர் அப்துல் காதிர்அக்கான் கூறினார்.
இந்த பூகம்பத்தால், மின்சாரம், தொலைபேசி தொடர்பு ஆகியவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே துருக்கியில் கடந்த 1999ம் ஆண்டு ஏற்பட்ட 2 பூகம்பங்களால் 20,000 பேர் வரை பலியானார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.