வீரப்பன் விவகாரம்: அதிரடிப் படை தலைவர்கள் ஆலோசனை
மேட்டூர்:
கர்நாடக அதிரடிப்படைத் தலைவரான கெம்பையாவும் தமிழக அதிரடிப்படைத் தலைவர் வால்டர் தேவாரமும்வீரப்பனைப் பிடிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 2 மணி நேரம் சந்தித்து பேசினர்.
வீரப்பனைப் பிடிப்பதற்காக மாதேஸ்வரன் மலை, பாலாறு சோதனை சாவடி, வீரப்பனின் சொந்த ஊரானகோபிநத்தம் ஆகிய இடங்களில் தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் வீரப்பனுக்கு உடைகள் தைத்துக் கொடுத்த சின்னபொன்னான் மற்றும் வீரப்பனுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்லும் கொங்கரைப்பட்டியைச் சேர்ந்த ஒருவனையும் போலீசார் கைது செய்துவிசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் அதிரடிப்படையினர் வீரப்பன் காட்டுப் பகுதிக்குள் தங்கும் இடங்களைக் காட்டுமாறு கேட்டனர்.அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்நது கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு காட்டுக்குள்புகுந்துள்ளனர்.
இந்நிலையில் மேட்டூர் வந்த கெம்பையா, அங்குள்ள அதிரடிப் படை முகாமில் தங்கியுள்ள தேவாரத்தை சந்தித்து 2மணி நேரம் பேசினார்.
அப்போது அவர்கள் இருவரும் வீரப்பனை பிடிப்பதில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications