சிங்கத்தைப் பிடிக்க வண்டலூரில் 2 கி.மீ.க்கு இரும்பு வேலி
சென்னை:
வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் நடமாடி வரும் சிங்கத்தைப் பிடிப்பதற்காக 2 கி.மீ. சுற்றளவுக்கு இரும்பு வேலிஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள கேளம்பாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற 2 பேர் சாலையில் சிங்கத்தைப் பார்த்ததாக மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் தெரிவித்தனர்.
ஆனால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களின் எண்ணிக்கை சரியாக இருந்தது. அதனால் கடந்த 10நாட்களுக்கும் மேலாக அந்த மிருகத்தைத் தேடும் பணியில் போலீசாரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மிருகக்காட்சி சாலை காலவரையறை இன்றி மூடப்பட்டது.
இந்நிலையில் இந்த மிருகம் மான்கள் இருக்கும் பகுதியில் நடமாடுவதாக சில தடயங்கள் வனத்துறைஅதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன. இந்தப் பகுதிகளில் 2 மான்கள் அந்த மிருகத்தால் அடித்துக் கொல்லப்பட்டதாகமிருகக்காட்சி அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் அந்த மிருகத்தைப் பிடிப்பதற்காக இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இது பற்றிமிருகக்காட்சி சாலை இயக்குனர் தியாகி கூறியதாவது:
அந்த மிருகம் நடமாடும் பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருப்பதால் ஊழியர்கள் அந்த மிருகத்தைக் கண்டும்அவர்களால் சுட முடியவில்லை.
அதனால் அது நடமாடும் பகுதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் 10 அடி உயரத்துக்கு இரும்பு வேலி அமைக்கப்பட்டுவருகிறது. இந்தப் பணி இன்று (திங்கள்கிழமை) மாலைக்குள் முடிவடைந்து விடும். விரைவில் அந்த மிருகத்தைப்பிடித்து விடுவோம். கிராமத்தினர் 5,000 பேரை வைத்துக் கொண்டு வனத்துறையினர் அந்த மிருகத்தை தேடியதாகவரும் செய்திகள் தவறானவை என்றார் தியாகி.












Click it and Unblock the Notifications