மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் சரண்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீர் அருகில் மசூதிக்குள் புகுந்து கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் 2தீவிரவாதகள் சரணடைந்தனர்.
அவர்களைப் பிடிக்க நெருங்கிய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது மறைந்திருந்து கொண்டு துப்பாக்கியால்தீவிராவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் கூடுதல் படை வரவழைக்கப்பட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தி விட்டு, கிராமத்துப் பெரியவர்களைமசூதிக்குள் அனுப்பி தீவிரவாதிகளை சரணடையச் செய்யுமாறு பாதுகாப்புப் படையினர் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் தீவிரவாதிகள் சரணடை மறுத்தனர். இதனால் மசூதியின் அடிப்படை வசதிகளான மின்சாரம், தண்ணீர்போன்றவை நிறுத்தப்பட்டன. ஆனாலும் தீவிரவாதிகள் தொடரந்து தாக்குதல் நடத்தினர்.
கடைசியில் நேற்று மாலை வேறு வழியில்லாமல் 2 தீவிரவாதிகளும் சரணடைந்தனர். தங்களிடமிருந்தஆயுதங்களையும் ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications