ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க கோரும் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரும் திமுக வேட்பாளரின் வழக்கு மீதானவிசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆண்டிப்பட்டியில் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் அங்குஅறிவிக்கப்பட்டுள்ள இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி அதே தொகுதியில் போட்டியிடும்திமுக வேட்பாளரான வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சரீன், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று தேர்தல் கமிஷன் தன்னுடைய பதில் மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீது இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரித்த நீதிபதி மன்மோகன் சரீன், அடுத்தகட்டவிசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதாவின் சார்பிலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications