விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 200 கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலையில் உளளது செங்கல்வராயன் சர்க்கரை ஆலை. இங்கு விவசாயிகள்கரும்பை விற்று வந்தனர். 1 டன் கரும்புக்கு ரூ.1,000 கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் பெரிய செவலை கூட்ரோடு அருகே 200 விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 1 டன்கரும்புக்கு ரூ.1,000 மற்றும் கரும்பு வெட்டுவதற்கு முன் ரூ.5,000 முன் பணம் வழங்குமாறு தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் 200விவசாயிகளை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications