கண்ணி வெடி அகற்றும் பணியில் புலிகள், ராணுவம்
கொழும்பு:
இலங்கை ராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் வடக்கு வன்னிப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் புலிகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வந்து பொருளாதாரத் தடையையும் இலங்கை அரசுநீக்கியுள்ளது.
இந்நிலையில் உணவுப்பொருட்கள் தடையின்றி செல்வதற்காக இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும்புலிகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கான சாலைகளைத் திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து வவுவினியாவின் வடக்குப் பகுதியில் 10 கி.மீ. தூரத்துக்கு கண்ணி வெடிகளை அகற்றும் பணியில்இன்று (புதன்கிழமை) இலங்கை ராணுவத்தினரும், புலிகளும் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.
நாளை காலை உயிலன்குளம் என்ற இடத்தில் வவுனியாவிலிருந்து, மன்னார் செல்லும் சாலையிலும் இந்தப் பணிநடைபெறும் என்று செய்தி தொடர்பாளர் அர்ஜூனா ராணவானா கூறினார்.
மேலும் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள கண்டி, யாழ்ப்பாண சாலைகளும் பொருட்கள் கொண்டுசெல்வதற்காக திறந்து விடப்பட உள்ளன.
மேலும் வடக்குப் பகுதிகளில் மீனவர்கள், அதிக நேரம் மீன் பிடிக்கவும், அதிக தூரத்திற்கு சென்று மீன் பிடிக்கவும்உள்ள தடைகளை நீக்கவும் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications